Sunday 30 December 2012

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர
் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்.. 

Wednesday 19 December 2012

புரதச்சத்தின் அவசியமும் மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்


புரதச்சத்தின் அவசியமும் மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்


மனிதன் உயிர் வாழ உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த மூன்றில் நீரும் காற்றும் இயற்கை அன்னை நமக்கு இலவசமாகக் கொடுக்கிறது என்பதையும் அறிவோம். இலவசமாகக் கிடைக்கும் எதையும் மனித இனம் எப்படி பயன்படுத்தும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

காசு கொடுத்து வாங்கும் உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இருந்தாலும் நினைவுக்காக இன்னொரு முறை கூறுவதில் தவறு இல்லை.

1. கார்போஹைட்ரேட்ஸ்
2. புரதச்சத்து
3. கொழுப்புச் சத்து
4. வைட்டமின்ஸ் மற்றும் ஹார்மோன்கள்
5. கனிமச்சத்துகள்.

இதில் புரதச்சத்து சம்பந்தமாக சில உண்மைகளை ஆராய்வோம். புரதச் சத்து என்பது நைட்ரஜன் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் "ந்யூக்ளியஸ்" என்றொரு பாகம் இருக்கிறது. இது முற்றிலும் புரதச்சத்தினால் ஆனது. மனிதனின் செல்களின் ஆயுள் காலம் 15 முதல் 25 நாட்கள் மட்டுமே. ஏறக்குறைய 25 நாட்களுக்கு ஒரு முறை நாம் புது மனிதனாக மாறுகிறோம். ஆனால் எப்படி அதே பழைய விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதுதான் நம்மைப் படைத்தவன் நிகழ்த்தும் அதிசயம்.

இப்படி இந்தப் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்போது ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம். பழைய செல்கள் அழியும்போது அதன்  "ந்யூக்ளியஸ்" ல் உள்ள புரதங்கள் அழிந்து யூரியாவாக மாறுகிறது. இது ரத்தத்தில் கலந்து கிட்னிக்குப் போகும்போது பிரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. விவசாயத்தில் பயிர் வளர்ச்சிக்காக "யூரியா" என்ற உரம் போடுவது உங்களுக்குத் தெரியும். பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை இந்த யூரியாதான் கொடுக்கிறது.

அழிந்து போன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாகும்போது அவைகளுக்கு  புரதச்சத்து தேவைப்படுகிறது. மனித உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரதம் தினந்தோறும் தேவை. அறுபது (60) கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு தினந்தோறும் 30 கிராம் புரதம் தேவை.

நாம் சாப்பிடும் முக்கிய உணவுகளில் இருக்கும் புரதச்சத்தின் அளவுகள் வருமாறு.

பருப்பு - 40 %
பால்     -  6%
அரிசி   -   3%
மட்டன், மீன் - 30%
முட்டை -  30%
காய்கறிகள் - 1 அல்லது 2%

நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் இருக்கும் புரதச்சத்து முழுவதும் அப்படியே உடலுக்குக் கிடைப்பதில்லை. 50 லிருந்து 60 சதம் மட்டுமே உடலுக்கு கிடைக்கிறது. ஆகவே ஒரு மனிதன் கிட்டத்தட்ட 100 கிராம் புரதம் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சில மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகள்:

இவைகளை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

சில கடல் தாவரங்களில் புரதச்சத்து 50 % வரை இருக்கிறது. தவிர இந்தப் புரதச்சத்துகள் 50 -60 % வரை உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த வகையில் இவை மிகவும் நல்ல உணவுதான். சந்தேகமே இல்லை. ஆனால் மனிதனுக்கு தினமும் வேண்டிய 100 கிராம் புரதச்சத்தை இத்தகைய உணவுகளின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாமே என்று தோன்றினால் அது தவறு. முதல் காரணம் அவைகளின் கிடைக்கும் அளவு. எல்லோருக்கும் வேண்டிய அளவு கடல் தாவரங்களை சந்தைப்படுத்த முடியாது. கடலில் அவ்வளவு தாவரங்கள் இல்லை.

இரண்டாவது மனிதன் ஒரே வகையான உணவை தினந்தோறும் சாப்பிடமுடியாது. ருசியைத் தவிர ஒரே வகை உணவைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடும்.

மூன்றாவது அவைகளின் விலை. அதிகமாக கிடைக்காததால் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். சாதாரண ஜனங்களால் வாங்கி உபயோகப்படுத்த முடியாது.

"ஸ்பிருலினா" என்பது இத்தகைய தாவரங்களில் ஒன்று. இயற்கையாக இவை கடலில் வளர்கின்றன. ஆனால் செயற்கையாக இவைகளை உள்நாட்டிலும் வளர்க்க முடியும். இவைகளில் உள்ள புரதம் மிகவும் நல்ல வகையைச் சேர்ந்தது. ஆகவே சில பரிசோதன்களில் மனித உடலுக்கு இது நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்தார்கள்.

இந்த முடிவை சில மருந்துக் கம்பெனிகள் ஆதாரமாக வைத்துக்கொண்டு "ஸ்பிருலினா" மாத்திரைகள் மற்றும் கேப்சூல்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். டாக்டர்களும் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்கள். இதில் எல்லாம் ஒன்றும் ஏமாற்று வித்தைகள் இல்லை.

ஆனால் இந்த மாத்திரைகளை என்ன விலைக்கு விற்றார்கள், அதில் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதுதான் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி.

ஒரு "ஸ்பிருலினா" கேப்ஸ்யூலில்" ஐந்நூறு (500) மில்லி கிராம், அதாவது அரை கிராம் ஸ்பிருலினா எக்ஸ்ட்ராக்ட் இருக்கிறது. அதில் ஒரு 300 மில்லிகிராம் புரதம் இருக்கும். தினம் 3 அல்லது 4 கேப்ஸ்யூல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் அன்றாட புரதத் தேவையில் ஏறக்குறைய நூற்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு செலவு, ஒரு கேப்ஸ்யூல் 5 ரூபாய் வீதம் 15 அல்லது 20 ரூபாய் ஆகும்.

மக்களே, யோசித்துப் பாருங்கள்.

சுமார் 5 கிராம் (இன்றைய விலையில் 50 பைசா)  துவரம் பருப்பிலிருந்து கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு 20 ரூபாய் விலை வைத்து மருந்துக் கம்பெனிகள் விற்கின்றன. நம் உணவில் கிடைக்காத. நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு நாம் அதிக விலை கொடுக்கிறோம். அதிலாவது ஓரளவு நியாயம் இருக்கிறது.

நம் அன்றாட உணவில் கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு இவ்வளவு விலை வைத்து விற்கிறார்களே, இதில் உள்ள உள்வயணம் தெரியாமல் நம் மக்களும் வாங்கிச் சாப்பிடுகிறார்களே, இந்தக் கொள்ளைக்கு சில டாக்டர்களும் துணை போகிறார்களே என்று நினைக்கும்போது என் வயிறு பற்றியெரிகிறது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் அதில் இந்த மாத்திரைகளில் இருப்பதைவிட பல மடங்கு புரதம் கிடைக்கும். (10 -15 கிராம்). முட்டை சாப்பிடாதவர்கள் தினம் 50 கிராம் "சோயா மீல்மேக்கர்" எடுத்துக்கொண்டால் அதில் 15 -20 கிராம் புரதம் கிடைக்கும். அது எல்லாம் வேண்டாம், தினம் ஒரு 20 கிராம் (உள்ளங்கை அளவு) பொட்டுக்கடலையை எடுத்து சாப்பிட்டால் அதில் 10 கிராம் புரதம் கிடைத்துவிடும்.

ஜனங்கள் 500 மில்லி கிராம் என்றால் ஏதோ பெரிய அளவு என்று நினைக்கக் கூடும்.. சிறிது யோசித்தால் 500 மில்லி கிராம் என்பது 1/2 கிராம்தான் என்று  புரியும். அரை கிராம் தங்கம் வேண்டுமானால் 1500 ரூபாயாக இருக்கலாம். அரை கிராம் கடல் பாசிக்கு 5 ரூபாய் கொடுப்பது அநியாயத்திலும் அநியாயம்.


Monday 10 December 2012


வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்


1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

2. நல்ல ஆரோக்கியமே மனிதனின் சொத்து. நீங்கள் உங்கள் மனைவி மக்களை உண்மையாக விரும்புவீர்களானால் உங்கள் உடல் நலத்தை முக்கிமாகப் பேணவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பாரமாகி விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்து கொள்ளுங்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

3. பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, குடும்ப அங்கத்தினர்களின் மரியாதையைப் பெற, உடல் ஆரோக்கியத்தைப் பேண, இத்தியாதி காரியங்களுக்குப் பணம் தேவை. உங்கள் குழந்தைகளானாலும் சரி, உங்கள் சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள். வயதான காலத்தில் அவர்கள் உங்களைக் காப்பாற்றினால் சந்தோஷப்படுங்கள். இல்லாவிட்டால் உங்கள் காலில் நிற்க பணம் தேவை.

4. அமைதியான வாழ்வு வாழுங்கள். நல்ல பொழுது போக்குகளும் நல்ல தூக்கமும் வாழ்க்கைக்கு அவசியம். ஆன்மீக விஷயங்களில் நாட்டமும், நல்ல சங்கீதமும் அமைதிக்கு வழி.

5. நேரம் விலை மதிப்பு மிக்கது. அதுவும் வயதான பின்பு மிகமிக மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். அந்த நாளை கவலைகளில் வீணாக்காமல் இன்பமாக கழியுங்கள்.

6. மாறுதல் ஒன்றே மாறாதது. காலம், மனிதர்கள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைக்குறித்து வருத்தப்படாமல் நீங்களும் அந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள். உங்களுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை மற்றவர்களுக்காக உழைத்ததில் அந்த விருப்பங்களை தள்ளிப்போட்டிருப்பீர்கள். இப்போது அவைகளை அனுபவியுங்கள். அது சுயநலம் போல் தோன்றினாலும் அந்த சுய நலம் உங்களுக்குத் தேவை.

8. மன்னிப்போம்-மறப்போம். மற்றவர்களின் குறைகளை பெரிது பண்ணாதீர்கள். உங்களுடைய நலனுக்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாகாமலிருக்க மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

9. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவியுங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பாணியில் வாழ சுதந்திரம் உண்டு.

10. மரண பயத்தை வெல்லுங்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதி மாற்ற முடியாதது. அதை உணர்ந்து மரண பயத்தை வெல்லுங்கள்.   நீங்கள் இறந்து விட்டால் உங்கள் மனைவி மக்கள் எப்படி வாழ்வார்கள் என்ற கவலை வேண்டாம். யாரும் இறந்தவர்களுடன் இறப்பதில்லை. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

தமிழன் மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது

                                   மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து ப
யணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

  நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செ
ல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து ப
யணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலை

நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு 
நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு 

ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

Friday 19 October 2012

KAVIARAASU KANNADASAN & WORLD GOLDEN WORDS

ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன்.


தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது. -பங்.


முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது. -தாகூர்.


கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை. -மர்பி.


அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள். -டிரைடன்.


வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் -பீசீசர்.


நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது. -எலினார் ரூஸ்வெல்ட்.


நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள். - இங்கர்சால்.


மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டில்.


ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை. - ஜீந்தொஃபோன்தேன்.


ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது. -ஜப்பான்.


பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். -வேல்ஸ்.


தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான். -கொரியா.


உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும். -சீனா.


தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன். -செக்கோஸ்லோவேகியா.


பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது. -டென்மார்க்.


வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. -துருக்கி.


உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.


நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய். - பல்கேரியா.


பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரான்ஸ்.


இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது. - பின்லாந்து.


மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது. - பெல்ஜியம்.


இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது. -ருமேனியா.

Sunday 7 October 2012




இவர் பெயர் நாகராஜன்,
கட்லூரை சேர்ந்த இவர்
சிதம்பரதுல MSC., Software
Engineering final year
படிக்கறாரு, இவருடைய
கண்டுபிடிப்பு ஒரு மகத்தான
வெற்றிய தந்துருக்கு.
தவுட்ல
இருந்து எரிவாயு (gas)
கண்டுபிடிச்சிருக்காரு,
இரண்டு பக்கம் அடைக்கப்
பட்ட தகர டப்பாவில்
தவிடு போட்டு மூடி அத
சூடு படுத்தினா, காஸ்
உருவாகி அந்த டப்பால
செட் பன்ன சின்ன குழாய்
மூலமா வெலியெற்ற
படுது,
அதை தீக்குச்சியால்
கொளுத்தியபோது நீல
நிரத்துல எரிந்தது. இந்த
எரிவாயுவை சிலிண்டர்ல
அடைத்து அடுப்பெரிக்க
பயன்படுத்த
முடியும்னு நாகராஜன்
தெரிவித்தாரு.
ஒரு முக்கியமான தகவல்
இந்த புதிய எரிவாயுவ
கண்டுப்பிடிச்ச
நாகராஜன்
ஒரு மாற்றுத்திரனாலி
(ஊனம்முற்றவர்). நம்மலால
முடிஞ்ச ஒரு சின்ன
உதவி like அல்லது share
கொடுப்போம்..
நன்றி : உங்களுக்கு வந்த பதிவு

Tuesday 14 August 2012

கடவுளைப் பார்த்தவர் ........


கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.



\\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.
===================================================================


மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

Saturday 11 August 2012

உயர்ந்த சிந்தனைகள்

                    

                 வெற்றிச் சிந்தனைகள்



  1.            தூய உள்ளம்தொண்டு செய்யும் ஆர்வம்
     பிறருக்கு ஆதரவாக இருப்பதுஇரக்கம்காட்டுவது
     இவை     நிம்மதியளிக்கும்.   

 2.            துன்பத்தையோதோல்வியையோ ஒரு போதும் கண்டிராத    
     மனிதனை நம்பாதேஅவனைபின்பற்றாதே
     அவன் கொடியின் கீழ் போரிடாதே.

 3.            புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும்
    வறுமை வந்தால் உடல்உள்ளம்பலகீனமடையும்பிறர்               வெறுப்பார்கள்நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

 4.            விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

 5.            நோய்நெருப்புபகைகடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாதுசமயம் பார்த்து இவைநம்மை அழித்து விடும்.

 6.            இளமையில் கல்வி கற்காமலும்பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில்கஷ்டப்பட நேரிடும்முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ளவேண்டும்.

 7.            உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.

 8.            உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.

 9.            யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம்நம் வருவாயில் வாழ்வது கௌரவம்.கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம்வாங்கிய கடனைத் திருப்பித் தருவதுகௌரவம்.

 10.         ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம்உணர்வை இழக்கலாம்உரிமையைஇழக்கலாம்ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.

 11.         பணத்தால் அன்பையோநிம்மதியையோ வாங்க முடியாது.

 12.         ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய்அறிவுதான் தகப்பன்தர்மம்தான் சகோதரன்,தயவுதான் நண்பன்அடக்கம்தான் மனைவிபொறுமைதான் மகன்இவர்களே உறவினர்கள்.

 13.         வீரனைப் போரிலும்நண்பனைக் கஷ்ட காலத்திலும்,       மனைவியை வறுமையிலும்,யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.

 14.         பெருந்துன்பமும்பெருங்கவலையும் உற்ற காலத்திலும் 
     ஒரு பெண் தன் ஆலோசனையால்கணவனின் உயிர் காப்பாள்.