Tuesday 14 August 2012

கடவுளைப் பார்த்தவர் ........


கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.



\\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.
===================================================================


மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

Saturday 11 August 2012

உயர்ந்த சிந்தனைகள்

                    

                 வெற்றிச் சிந்தனைகள்



  1.            தூய உள்ளம்தொண்டு செய்யும் ஆர்வம்
     பிறருக்கு ஆதரவாக இருப்பதுஇரக்கம்காட்டுவது
     இவை     நிம்மதியளிக்கும்.   

 2.            துன்பத்தையோதோல்வியையோ ஒரு போதும் கண்டிராத    
     மனிதனை நம்பாதேஅவனைபின்பற்றாதே
     அவன் கொடியின் கீழ் போரிடாதே.

 3.            புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும்
    வறுமை வந்தால் உடல்உள்ளம்பலகீனமடையும்பிறர்               வெறுப்பார்கள்நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

 4.            விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

 5.            நோய்நெருப்புபகைகடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாதுசமயம் பார்த்து இவைநம்மை அழித்து விடும்.

 6.            இளமையில் கல்வி கற்காமலும்பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில்கஷ்டப்பட நேரிடும்முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ளவேண்டும்.

 7.            உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.

 8.            உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.

 9.            யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம்நம் வருவாயில் வாழ்வது கௌரவம்.கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம்வாங்கிய கடனைத் திருப்பித் தருவதுகௌரவம்.

 10.         ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம்உணர்வை இழக்கலாம்உரிமையைஇழக்கலாம்ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.

 11.         பணத்தால் அன்பையோநிம்மதியையோ வாங்க முடியாது.

 12.         ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய்அறிவுதான் தகப்பன்தர்மம்தான் சகோதரன்,தயவுதான் நண்பன்அடக்கம்தான் மனைவிபொறுமைதான் மகன்இவர்களே உறவினர்கள்.

 13.         வீரனைப் போரிலும்நண்பனைக் கஷ்ட காலத்திலும்,       மனைவியை வறுமையிலும்,யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.

 14.         பெருந்துன்பமும்பெருங்கவலையும் உற்ற காலத்திலும் 
     ஒரு பெண் தன் ஆலோசனையால்கணவனின் உயிர் காப்பாள்.